×

சினாமிகாவின் கதை என்ன?: பிருந்தா மாஸ்டர் விளக்கம்

 நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் முதன் முதலாக இயக்கும் படம் ஹே சினாமிகா.  இப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் நடித்துள்ளனர். தமிழ், மலையாள மொழிகளில் வருகிறமார்ச் 3ம் தேதி  வெளியாகிறது. படம் பற்றி பிருந்தா மாஸ்டர் கூறியதாவது: உற்சாகமிக்க தனித்துவ இளைஞரான யாழன் (துல்கர்), அவரை காதலிக்கும் வானிலை விஞ்ஞானி மௌனா (அதிதி) ஆகியோரின் வாழ்க்கைக்குள் துல்கரின் முன்னாள் தோழி காஜலின் (மலர் விழி) வருகைக்கு பிறகு  என்ன நடக்கிறது, என்பதுதான் கதையின் மையக்கரு.

காதல், நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் இசையின் கலலையாக உருவாகியுள்ள ஹே சினாமிகா, காதல் மற்றும் நட்பைக் கொண்டாடும் இளைமை ததும்பும் படமாக இருக்கும் படம். இது ஒரு ஃபீல் குட் படம். இளைஞர்கள் மிகவும் ரசிப்பார்கள். அதே சமயம், அனைத்து வயதினரும் இப்படத்தைப் பார்த்து மகிழலாம். கொண்டாட்டம், குதூகலம் என உணர்ச்சிகளின் உற்சாகக் குவியலாக ‘ஹே சினாமிகா’ இருக்கும். என்கிறார் பிருந்தா மாஸ்டர்.

Tags :
× RELATED அமெரிக்காவில் தயாரான தமிழ்த் திரைப்படம் “தி வெர்டிக்ட்” !!